Wednesday, January 21, 2015

குமார் என்ற இந்த ட்ராஃபிக் சார்ஜண்ட் சென்னை சோலிங்கநல்லூர் லிங்க் ரோட் சந்தித்துக்கொள்ளும் பிஸியான பகுதியில் அவரது கடமை உணர்வுடன் கண்ட்ரோல் செய்து கொண்டிருந்தார். அவரை ஓரிருமுறை பார்த்து கொண்டிருந்தேன். இவரது எந்தூவை பார்த்து ஒரு நாள் இவரை சந்திக்க ஆவலாய் இருந்தேன். எல்லோரும் போல இல்லாமல் தனக்கென ஒரு பாணி கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் இந்த பணியை செய்கிறார். ஒரு ப்யூடி என்னவென்றால் கடந்த ஞாயிற்று கிழமை மார்க்கெட் சென்றபோது தற்செயலாக இவரை சந்திக்க நேர்ந்தது. அங்குள்ள காய் கறி கடாய் வைத்திருக்கும் சரவணன், முருகன், அமல்ராஜ், அசார், அன்சாரி எல்லோருக்கும் இவர் பரிச்சயம். எல்லாரும், நல்ல மனுஷன் சார் அவர் என்று ஒரு சேர கூறினார்கள்.
என்னை கண்டதும் நேராக வந்தார். பிடித்த கையை விடவே இல்லை. நான், சார், இவ்வளவு டென்சனான ஜாபை எப்படி சார் இப்படி சிரித்துக்கொண்டே செய்கிறீர்கள் என்று கேட்டேன். சார், அமெரிக்காவில் ஒரு போலீஸ் அதிகாரி இறந்த போது அவ்வளவு கூட்டம். ஒரு போலீசுக்கு இவ்வளவு கூட்டமா என்று அவரை பற்றி படித்த போது என் மனது மாறியது. அவரின் நற்பண்புகள் (Being Responsible) அவரை ஒரு மதிக்கதக்க மனிதராக மாற்றியிருக்கிறது. அன்றிலிருந்து நான் எப்பொழுதும் ஒரு பாசிட்டிவ் ஆட்டிட்யூட் உடன் இந்த வேலையை செய்கிறேன் என்றார். இவருக்கு மூன்று குழந்தைகள். ரஜினிகாந்த் ஒரு படத்தில் ட்ராஃபிக் கண்ட்ரோல் செய்வார். அது போல் சிரித்த முகத்துடன் இவர் டிராஃப்ஃபிகை கண்ட்ரோல் செய்வதை நீங்கள் காணலாம்.
அது மட்டுமின்றி கவுன்செலிங்க், படிப்பு இன்ன பிற உதவிகள் என்று சகலமும் செய்கிறார். இவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் வாகனங்களை விட வேகமாக ஓடுகிறது. ஆனால் இவரின் எனர்ஜி மட்டும் குறையாமல் அதே புன்முரவலுடன் பாஸிட்டிவா வருகிறது. ஒரு விலகப்போகும் தம்பதியை உறவு முறைகள் முக்கியத்துவம் குறித்து பேசியே சேர்த்து வைத்திருக்கிறார். சாதி மாதம் பாகுபாடு எல்லாம் இல்லாமல் எல்லோரிடத்திலும் பழகும் நல்ல மனிதர்.
இந்த வேலையில் ஏகபட்ட தொல்லை இருக்கும். சிக்னல் மாறினாலும் அப்போதுதான் ஒருவன் வேகமாக நாசா லாஞ்ச்க்கு நேரமாகிவிட்டது, இவன்தான் போயி இக்நைட் பண்ணனும்ன்ற அளவுக்கு பறப்பான். குமாரோ அவனை நிறுத்தி, தம்பி, நோ, நோ, பேக்க்ல போ என்று சொல்லும்போது ரிவர்ஸ் செய்வதை பார்த்திருக்கேன். ஒரு பெரியவர் ரோட்டை க்ராஸ் செய்த போது ஓடிச்சென்று, ஐய்யா, என்னங்கைய்யய்யா அவ்வளவு அவசரம் என்று அவரின் கரம் பற்றி ஓடிப்போய் அவரை எதிர்முனையில் விட்டார். இது போல் நித்தம் ஒரு நிகழ்ச்சி. இந்த பகுதியில் வந்தால் நீங்களும் இவரை வாழ்த்தலாமே!!!