Friday, January 6, 2017


என் மனைவியின் தாத்தா சேதுராமன் 1920 வருடம் மயிலாடுதுறையில் குருசாமி அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவருக்கு சிறுவயதிலேயே உடற்பயிற்சியில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இவர் குடும்பத்தினர் மரவாடி (Timberyard) வைத்திருந்தார்கள். அதனருகிலேயே உடற்பயிற்சிக்காக இவர் ஜெயமாருதி எனும் பயிற்சி கட்டிடத்தை தோற்றுவித்தார். 1940களில் தனக்கு அப்பாதுரை என்பவரை குருவாக கொண்டு மேலும் பயிற்சி பெற்றார். 

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/All-sports-must-get-the-same-importance-as-cricket-Ansari/article15307753.ece

1950ல் தேவன்குடியை சேர்ந்த மைனர் வேணுகோபால மழவராயர் தங்கை பாஞ்சாலியை மணமுடித்தார். பாஞ்சாலி என்ற பெயர் பிடிக்காததால் சரோஜா என்றே கூப்பிடுவார். இந்த தம்பதியினருக்கு வாசுகி என்ற மகளும் இருமகன்களும் பிறந்தனர். வாசுகியின் இரண்டாவது பெண்தான் எனது மின்சாரம். ஒரு முறை நான் 10 கிலோ தம்பெல் எடுத்து சீன் போட்டபோது குறுக்கே வந்த மனைவி உங்களுக்கு விளையாட வேறேதும் இல்லையா என்று சுண்டுவிரலால் தட்டி விட்டு சென்றதை பார்த்து அதிர்ந்தேன். ஜீன்லையே பளுதூக்குதல் இருப்பதால் நான் என்னதான் கராத்தே கருப்பு பெல்ட் வாங்கியிருந்தாலும் எப்போதும் அடக்கியே வாசிப்பது வழக்கம். 
சேதுராமன் தமிழ்நாட்டில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை குவித்திருக்கிறார். 1952 ஒலிம்பிக்ஸ்ல் இந்தியாவின் சார்பாக சென்று நான்காம் இடத்தை பெற்றார். அந்த வருடம் பிரதமமந்திரி ஜவஹர்லால் நேருவின் கையால் கேடயம் பெற்றார். 

https://en.wikipedia.org/wiki/S._G._Sethuraman 

அதன் பிறகு தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு போட்டியின் தலைவராய் இருந்து பல இளைஞர்களை ஊக்குவித்திருக்கிறார். நான் அவரை பார்க்க சென்றபோது உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் எனையும் அவர் மாணவனாக நினைத்து தினமும் பயிற்சி செய்கிறாயா, தவறாமல் பயிலகத்துக்கு வரவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 

https://en.wikipedia.org/wiki/Weightlifting_at_the_1951_Asian_Games 

நல்ல வசதிகளும் நல்ல பயிற்சியாளரும் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் அந்த வருடமே தங்கபதக்கத்தை வென்றிருப்பார். ஒரு வேலை அவரிடம் நான் மாணாக்கனாக இருந்திருந்தால் நானும் நம் நாட்டிற்கு ஒரு பதக்கம் வென்றிருப்பேன் என்று என் மனைவி கூறுவார். Dangal Effect?

மயிலாடுதுறை சந்திப்பு (junction) ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்தால் விநாயகர் கோவில் எதிரேயே முதல் வீடுதான் இவர் வீடு.