Friday, December 18, 2015

Semmancheri distribution of toileteries

மும்மதமும் சேர்ந்து இன்று செம்மஞ்சேரி சென்றபிறகு பெருங்குடி கல்லுகுட்டை 5000 பேர் மேல் இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு எங்கள் வேன் சென்றது.
200 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. வாழ்பவர்கள் கீழ் நடுத்தர வர்க்கம் சேர்ந்தவர்கள்.
அவர்கள் வாழ்வதற்குரிய இடமாக மாற்ற 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடியது பலனில்லை.
ஏரியின் ஒரு கரையில் இருந்து மறு கரை அடைவதற்குப் thermocol படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கல்லுகுட்டையின் முக்கிய பிரச்சினைகள் ஒன்று குடிநீர். தரையில் நீர் மாசுபட்டதால் மாநகராட்சியிடம் மன்றாடியும் தண்ணீர் சப்ளை இல்லை என்றது.
எனவே அவர்கள் 12 லிட்டர் தண்ணீர் வாங்க ரூ3 செலுத்துவேண்டும் என்று ஒரூ பெரியவர் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் மெட்ரோ குடிநீர் தந்ததாக கூறுகிறது. இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் ஏற்றத்தால் புல்டோசர்கள் விட்டு அவர்களை வெளியேற்றவும் முயன்றனர் என்று மேலும் கூறினார். பல குழந்தைகள் பாம்பு கடித்து இறந்திருக்கிறது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சி பற்றிய குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. வசிப்பவர்கள் 1988ல் அண்ணா பல்கலைக்கழகம் இடத்தை வாங்கியதை அறியாமலேயே வாங்கியிருக்கிறார்கள். அரசு 50 ஏக்கர் நிலத்தில் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சமூக வசதிகள், மற்றும் 300 சதுர அடி அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிதருகிறோம் என்று கூறியும் மக்கள் இங்கே மிக பெரிய இடத்தில் வசிப்பதால் மேலும் மனையாக இல்லாதால் ஏற்க தயாராக இல்லை. இது ஐடி நிறுவனங்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு வசதியாகிவிட்டது.
பிரபஞ்சத்தில் ஆண்டாளுக்கு ஒரு கல்லுக்கோட்டை, திருவாய்மொழிக்கு ஒரு கல்லுக்கோட்டை என்று இருக்கிறதாம். அதை யாரும் எளிதில் உடைக்க முடியாதாம்.
இங்கு ஒரு கல்லுகுட்டை மக்களுக்கு வழி பிறக்குமா?
கல்லுகுட்டை போல் இருக்கும் வரை நம்மை மேலைநாடுகள் பழிப்பதில் தவறில்லை. வல்லரசாகிவிடுமா??

No comments:

Post a Comment