Sunday, January 14, 2018

பிறந்த தையில்
புவியில் பிறந்ததை 
எண்ணி சினத்தை விட்டு
நலத்தை பேணி
செல்வத்தை அடைந்து
வளத்தை பெற்று
தை திருநாள் தினத்தையொட்டி
மாவிலை தோரணத்தை கட்டி
கருப்பட்டியின் மணத்தையும்
ஏல முந்திரியின் வனத்தையும்
இணைத்து அனைத்தையும் பானையிலிட்டு
மஞ்சள் கொத்தை சுற்றி
இஞ்சி குறுத்தை முடிந்து
திருநீர் குங்குமத்தை பூசி 
ஆதவன் முன் அன்னத்தை வைத்து
கதரின் ஆடை நெய்ததை உடுத்தி 
ஆடு ஆ அனைத்தையும் சேர்த்து
கற்பூரத்தை காட்டி
வயல் கதிர் முதிர்ந்ததை நினைந்து
வியர்வையால் நனைந்ததை மறந்து
தமிழ் உயிர்களே பொங்குவோம் பொங்கல் 
சுரேஷ் ராஜசேகரன்

No comments:

Post a Comment