Tuesday, July 17, 2018

கயல் கதையல்ல

காய்ந்த சருகுகலுனூடே சிறிய சலசலப்பு. தெருவிளக்கு ஆறுமணிக்கு போடுவது சில நிமிடங்கள் தள்ளி போகிய நாள். இருளப்போகும் போகும் நேரத்தில் தான் அஞ்சு அவளை கண்டாள். சற்றே சருகுகளை விளக்கி பார்த்தால் அழகாக முனகலுடன் இருப்பதை பார்த்து விட்டுபோக மனமில்லை. ஆனால் ஹாஸ்டலில் தன் கூட தங்க வைக்க பயம். வார்டனிடம் சொல்லி சமாளிக்கலாம் என்று அஞ்சு அரவணைத்ததாள்.
அஞ்சு விலங்குகள் பறவைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பவள். வீட்டிற்கு செல்லும் வழியில் பாக்பைப்பர் கதையில் எலிகள் வருவது போல் தெருவில் உள்ள நாய்கள் கூடவே வரும். சிலவாரங்களுக்கு முன் தனியாக ஒரு குட்டிநாய் தெருவில் இருந்ததால் வீட்டிற்கு தூக்கி கொண்டு வந்தேவிட்டாள். இது எப்போதும் நடப்பதுதான் என்பது போல் பெற்றோர். அதற்கு ஓரியோ என்று பெயரிட்டு கொச்சினில் உள்ள தன் வீட்டில் தங்க வைத்துவிட்டாள்.
ஒரியோவுடன் ஓரிரு வாரம் இருக்கத்தான் கொச்சின் பயணமானாள். ஆனால் விடுதியில் தன்னுடனான கயல். கயல் கயல்விழி கொண்டவள். கயல் தனியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை அன்றுணர்ந்தாள். விடுதியில் வில்லனாக காவலாளி என்று இந்த தனிமை கிடைக்கும் என்று இருந்திருப்பான் போலும்.
அஞ்சு ஆனந்தத்துடன் திரும்பினாள். கல்லூரி விடுதியின் கதவை திறந்ததுதான் தாமதம். அழுகையை அவளால் அடக்கமுடியவில்லை. பதைபதைப்புடன் அந்த காவலாளியின் மேல் ஆத்திரம். மனதை திடப்படுத்திக்கொண்டு ஒரு ஊகத்தில் தேடி சென்றாள். தானொரு கால்நடை மருத்துவர் என்று அறிமுகபடுத்திகொண்டு மாநகராட்சி கட்டிடம் உள்ளே கயலை பார்த்த போது கையலுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மறுமுறை செய்திருந்தார்கள். அஞ்சு விடுதியில் கயலை வைத்திருந்தபோதே ஒருமுறை மாணவர்கள் சேர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். அடையாளத்திற்கு காதில் சிறிதாக வெட்டி இருப்பார்கள். அதை மறந்துவிட்ட தவறை அப்போதுதான் உணர்ந்தாள். கயல் மாநகராட்சியினுள் மற்ற நாய்களுடன் இருந்தாதால் காயம் ஆறாமல் உயிருக்கு போராடியது.
அதனுடனே அன்றிரவு சாப்பிடாமல் மறுநாள் காலையும் கயலை மருத்துவமணையில் காண்பித்து வரும்வரை அழுதுகொண்டே இருந்தாள். கயல் தேறி வருகிறது.
அஞ்சு குழந்தையிலேயே இப்படி கால்நடை மருத்துவர் ஆக முடிவெடுத்துவிட்டாள். மனிதர்களிடம் மருத்துவம் செய்வதையும்விட விலங்குகளுக்கு விருப்பத்துடன் மருத்துவம் செய்வது அரிது. அதுவும் வெளிநாட்டிலிருந்து லாப்ரடார் போன்ற வகையை இறக்குமதி செய்யும் பலரில் தெருவிலிருக்கும் நாய்களை குழந்தைகளைபோல் பார்க்கும் அஞ்சனா தனிதான்......

No comments:

Post a Comment