Tuesday, July 17, 2018

I am lucky to see Dr. Ramamurthy of mayiladuthurai who do not prescribe medicines for fevers, viruses. Living Legend..
டாக்டர்கள் தினம் முடிந்து ஒரு வாரம் ஆகையில் முடிகொண்டானிலிருந்து வந்து மயிலாடுதுறைக்கு மகுடம் சூட்டிய மருத்துவர் ராமமூர்த்தி Dr.V.Ramamurthi அவர்களை எதேர்ச்சையாக காலை வாக்கிங் போது சந்திக்க நேர்ந்தது. ஒரு வேஷ்டி மற்றும் தோளில் துண்டு என்று இதுதான் இந்த வாத்திமா வகுப்பை சேர்ந்த அருமையான எளிய மனிதரின் தோற்றம். என் மனைவி 2 ரூபா டாக்டர் என்று இவரை சொல்லக்கேட்டிருக்கிறேன். உடம்பு சரியில்லை என்று போனால் 'ஏண்டிம்மா குழந்தை நன்னா இருக்கியோன்னோ, நன்னா இருந்தா ஏண்டிம்மா இங்க வர்ற..' என்று தன பேத்தியையோ மகளையோ போலதான் அழைப்பார். தற்போதுதான் முதல் முறையாக நேரில் பார்த்தேன். இப்போது பத்து ரூபாய், ஏழைகள் என்றால் அதுவும் வாங்குவதில்லை. 
புனிதமான மருத்துவத் தொழில் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி டாக்டரால் புனிதம் பெற்றது அருகாமையிலுள்ள கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் மக்கள் அவரிடம் வருவார்கள். அவர் பரிந்துரைக்கும் மருந்து கூட மிகக் கம்மியான விலை கொண்டதாகத்தான் இருக்கும். அரசு மருத்துவமனையில் கௌரவ டாக்டராக (அதாவது சம்பளம் வாங்கமல் உழைப்பது-அப்போது அது நடைமுறையில் இருந்தது, இப்போது இல்லை) இருந்து கொண்டே ஒரு கிளினிக் ஆரம்பித்து ஏழைகளுக்கு முடிந்த வரை இலவசமாக பணி செய்து தனக்கு வரும் சாம்பிள் மாத்திரைகளை அவர்களுக்கு கொடுத்து அப்பப்பா அவரின் குணம் யாருக்கும் வராது. சாம்பிள் மாத்திரைகளை காசாக்கியும், மெடிகல் ரெப்பிடம் குடும்பத்தோடு வெளி நாட்டிற்கு உல்லாச பயணம் செய்வதற்கும் ஓட்டல்களில் தங்குவதற்கும், லேப்-ல் கட்டிங் கேட்கும் டாக்டர்களின் நடுவே இது மாதிரி ஒரு மருத்துவர். அவரிடம் கற்றுக்கொண்ட சேவை எண்ணத்தை பின்பற்ற ஆசை. மருத்துவர்கள் கிட்டத் தட்ட தெய்வம் போல்தான்.

No comments:

Post a Comment